ஸ்ரேயாவுக்கு நம்பிக்கை கொடுத்த 'மனம்'
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரேயா, இளம் நடிகைகளின் வரவால், இரண்டு மாநிலங்களிலும் வாய்ப்பு இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான், நாகர்ஜூனா 'மனம்' என்ற படத்தில் மீண்டும் ஸ்ரேயாவுக்கு நாயகி வாய்ப்பு கொடுத்தார். அப்படம் அங்கு பெரும் வெற்றி பெற்றுள்ளது. மனம் வெற்றியால் புத்துணர்சியடைந்துள்ள ஸ்ரேயா, அங்கு மிண்டும் ஒரு ரவுண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் உற்சாகமடைந்துள்ளாராம்.

இதே உற்சாகத்துடன் அங்குள்ள முக்கிய பத்திரிகையாளர்களை சந்தித்து, தெலுங்கு சினிமா எனது வீடு மாதிரி, இங்கே மீண்டும் நான் வெற்றிக் கண்டிருப்பது சந்தோஷம், இந்த சந்தோஷம் தொடரும் என்று நம்புகிறேன், என்று கூறியுள்ளார்.